Wednesday, December 05, 2007

செம்மொழித் தமிழ் திரைக்கலைப் பயிலரங்கு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இவற்றுடன் நமது கல்லூரியும் இணைந்து நடத்தும் செம்மொழித் தமிழ் திரைக்கலைப் பயிலரங்கு கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கியது.
தமிழின் பண்டைய இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்களைதினமும் ஒரு இலக்கியமாக விளக்கம் தந்து அதைக் கொண்டு திரைக்கதை வடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் உருவாக்கப்ப்ட்டுள்ள 18 குழுவும் தலா ஒரு குறும்படத்தினை தத்தமது இலக்கியங்களில் எடுக்க வேண்டும்.
வெற்றிகரமாக இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்க்கிறது.