Wednesday, December 05, 2007

செம்மொழித் தமிழ் திரைக்கலைப் பயிலரங்கு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இவற்றுடன் நமது கல்லூரியும் இணைந்து நடத்தும் செம்மொழித் தமிழ் திரைக்கலைப் பயிலரங்கு கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கியது.
தமிழின் பண்டைய இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்களைதினமும் ஒரு இலக்கியமாக விளக்கம் தந்து அதைக் கொண்டு திரைக்கதை வடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் உருவாக்கப்ப்ட்டுள்ள 18 குழுவும் தலா ஒரு குறும்படத்தினை தத்தமது இலக்கியங்களில் எடுக்க வேண்டும்.
வெற்றிகரமாக இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்க்கிறது.

Tuesday, September 25, 2007

4 the people! -video song

நோபின் கொரியனால் இயக்கப்பட்ட வீடியோ பாடல்!

Thursday, September 06, 2007

அக்காலம்

தமிழக அரசின் மூன்று விருதுகளைத் தட்டிச்சென்ற கர்ணமோட்சம் படக்குழுவினரின் ஆவணப்படம்!
ஜெமினி ஸ்டூடியோசின் தலைமை சமையல்காரர் ஏ.என்.எஸ்.மணியன் அவர்களைப் பற்றிய 'அக்காலம்' ஆவணப்படம்.
தமிழகமெங்கும் பல இடங்களில் விருதுகள் பெற்ற இவ்வாவணப்படம் குழுவினரின் மற்றொரு சிறப்புப் படைப்பு என்பதில் அய்யமில்லை.



நன்றி: பிரசன்னராஜன்

அல்லது இங்கு செல்லவும்.

கர்ணமோட்சம்

தமிழக அரசின் 2005-2006 ஆம் ஆண்டுகளுக்கான மாணவர் விருதுகளில்,
இயக்கம்- முரளிமனோகர்,
ஒளிப்பதிவு - சிவராமன்,
படப்பதனிடுதல் - கீர்த்திபாசு
என மூனறு விருதுகளை அள்ளிய 'கர்ணமோட்சம்' குறும்படத்தினை நம்முடைய நண்பர்களின் பார்வைக்கு வைப்பதில் பெருமை அடைகிறோம்.



படம் தெரிவதில் சிக்கலிருப்பின் இங்கு செல்க.
நன்றி: பிரசன்னராஜன்

தமிழக அரசு விருது அறிவிப்பு! - வாழ்த்துகள்!

2004-2005 ஆம் ஆண்டிற்கு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகள் பின் வருமாறு:-
1. சிறந்த இயக்குநர் - என். பார்த்தசாரதி
2. சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. பிரசாத்
3. சிறந்த ஒலிப்பதிவாளர்- ஜே. பிரின்ஸ் டேவிட்
4. சிறந்த படத் தொகுப்பா ளர் - எஸ். சண்முகநாதன்
5. சிறந்த படம் பதனிடு பவர் - ஆர். அன்புசத்தியன்

2005-2006 ஆம் ஆண்டிற்கு, எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகள் பின்வருமாறு:-
1. சிறந்த இயக்குநர் - எஸ். முரளிமனோகர்
2. சிறந்த ஒளிப்பதிவாளர்- ஜீ. சிவராமன்
3. சிறந்த ஒலிப்பதிவாளர்- வி. ஹேமநாதன்
4. சிறந்த படத் தொகுப் பாளர் - என். ஜான்பால்
5. சிறந்த படம் பதனிடு பவர் - எல்.கே. கீர்த்திபாசு


வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!

Sunday, August 26, 2007

மாணவர்பேரவைத் தொடக்கவிழா-2

விழாவில் பங்கேற்ற நடிகை தேஜாசிறீ!
மாணவர்கள் மத்தியில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!
இயக்குநரும் நமது கல்லூரியின் முன்னாள் மாணவருமான அழகம் பெருமாள்!
நன்றி: பிரசண்ணா (மாணவர் பேரவை துணைத்தலைவர்)

Wednesday, August 22, 2007

மாணவர்பேரவைத் தொடக்கவிழா

2007-2008 கல்வி ஆண்டுக்கான நமது கல்லூரியின் மாணவர்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, பிரதிநிதிகள் பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள்... தொடக்கவிழா மற்றும், பா.விஜய் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நிழற்படங்கள்:



( மேடையில் இடமிருந்து...) ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குநர்-நடிகர் அழகம்பெருமாள், கவிஞர் நா.முத்துக்குமார்


மாணவர் பேரவை பொறுப்பாளர்கள்:
தலைவர்: கல்யாண ரமேஷ் (3 - இயக்குதல்)
துணைத்தலைவர்: பிரசன்னா (3 - ஒலிப்பதிவு)
பொருளாளர்: செந்தில் (3 - படத்தொகுப்பு )

செயலாளர்: ஹரிஹரசுதன்
இணைச் செயலாளர்: ரவீந்திரன்


திரையிடல் பேரவை பொறுப்பாளர்கள்:

செயலாளர்: மர்பி

இணைச் செயலாளர்: சுதன் & விஜய் லோகேஷ்


கவிஞர் பா.விஜய் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி

நன்றி: ரமணா, பிரசன்னா, சஜீஸ்

Tuesday, June 26, 2007

"ஓ...மனமே... உள்ளிருந்து அழுவது ஏன்?" -- ஜீவா மரணம்

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது. திடீரென வந்த இச்செய்தியை, ஒலிபரப்பிய சூரியன் பண்பலை தொடர்ந்து அவரது படமான 'உள்ளம் கேட்குமே'வில் இருந்து "ஓ மனமே!" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ! மனமே'.

எனக்குப் பிடித்த பாண்டஸி இயக்குநர்களில் முக்கியமானவர் ஜீவா. அவரது துல்லியமான ஒளிப்பதிவும், அவர் பயன்படுத்தும் வண்ணங்களும், காட்சிப்பட்த்துதலும் எனக்குப் பிடித்தவை. அவர் அறிமுகப்படுத்தும் கொழுக் மொழுக் நடிகர்கள் கூட!

அவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யின் "சரியா? தவறா?" பாடலில் வரும் வைரமுத்துவின் பாடல்கள் எனக்கு பிடித்த பெண்ணுரிமை வரிகள்.
நீண்ட காலம் திரு. பி.சி. அவர்களிடம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றவர் ஜீவா.

தமிழ்த்திரையுலகின் இழப்பில் ஒரு திரை மாணவன் என்கிற முறையிலும், ஜீவா படங்களை ரசித்தவன் என்ற முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.



அவர் நினைவாக....


Get Your Own Music Player at Music Plugin

Tuesday, May 22, 2007

திரைப்படக் கல்லூரி சேர்க்கை அறிக்கை

2007-2008 கல்வி ஆண்டுக்கான நமது கல்லூரி புதிய மாணவர் சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
11.5.2007 முதல் விண்ணப்பங்கள் கல்லூரியில் கிடைக்கின்றன.

M.G.R. Film and Television Institute
C.I.T CAMPUS, CHENNAI - 600 113
Admission Notification for 2007-2008
Issue of Application Forms will commence from 11.5.2007
Last date of receipt of filled-in Application : 1.6.2007 5PM
மேலும் தொடர்புகளுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும். முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களும், வருங்கால மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

Friday, March 16, 2007

விளையாட்டு விழா! பூப்பந்து!!!!

நின்று (மட்டுமே) ஆடிய வினோத் - கூட வெங்கடேஷ்





இது இரண்டாமாண்டு டீம்.... மர்பி, பாஸ்கர், ஆனந்த்(கீழ்), ஞானவேலு, சுந்தர், விஜய டி.ஆரின்.மருமகன் என்றழைக்கப்படும் சதீஷ்!

பூப்பந்து ரசிகர்கள்.!

5T சுனாமி சாந்தகுமார், கெண்டையான் விக்னேஷ், சூரியக்கதிர் வினோத்


இவரு எல்லா போட்டியிலயும் போட்டாவில இடம் பிடிக்கிறதுக்காகவே பங்கெடுத்த போட்டாகிராபர்! ராஜ பாண்டி
நிஸாரும் அருணும்!! ஓடுறாங்களாம்...... போட்டா எடுத்தவுடனே ஒதுங்கியாச்சு!
ரங்ஸ் அண்ணா, உமர் சார், குழந்தைகளுக்கு டூப் போடும் மதுசூதனன்

Sunday, March 11, 2007

தமிழ்த் தென்றல் -2

தம்பி, இரண்டாமாண்டு ஒலிப்பதிவுத் துறை லட்சுமி - சங்கமம் படத்திலிருந்த்து 'மழைத்துளி' பாட்டுக்கு ஆடிக் களைச்சபோது எடுத்தது.

பாட்டுப்புதிர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணி: 'ஆர்டர்' ராஜபாண்டி, 'அண்ணா யுனிவெர்சிட்டி' டேவிட், 'புலி வருது' தினேஷ்.
இரும்படிக்கிர இடத்தில ஈக்கு என்னவேலைன்னு பாக்குறீங்களா? கடைசி நேரத்தில சேர்ந்து - பசங்க எல்லாம் ஒரு பாட்டுக்காவது கண்டுபிடிச்சிடுன்னு ராஜபாண்டிக்கு சவால் விட்ட காட்சி இன்னும் மனசில நிக்குது. என்ன செய்ய நமக்கு இரண்டாமிடம் தான் கிடச்சது.

நடனப்போட்டியில கலந்துக்குவாங்கன்னு எதிர் பார்க்கப்பட்ட கலையரசியும், நிஸாரும் கடைசி நாளன்று ஆடிய குத்தாட்டம்!

மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நிவேதிதா மேடமும் களமிறங்கி ஆடிய கலக்கல் காட்சி! புகைப்படங்கள்: சமா

ம்ம்ம்ம்.... அதுக்குள்ள முடிஞ்சுடுமா தமிழ் தென்றல்... இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்வா மாணவர்கள் நடத்திய ஆசிரியர்களுக்கான பாட்டுப்புதிர் இருக்குதே! அதை வீடியோவில பாருங்க!

தமிழ்த் தென்றல் -1

வழக்கம் போல நம்ம 'விஜய' ரஹ்மான் அண்மைக்கால விஜய் படமான 'போக்கிரி'யிலிருந்து ஆடிய ஆட்டம்! (இவரது பழைய ஹிட் 'மச்சான் பேரு மதுர' என்பது குறிப்பிடத்தக்கது.)


கீழ நின்னு குத்து குத்துன்னு குத்துறதில தினேஷும், அருணும் எப்பவும் கில்லாடிங்க!


ராஜேஷ் மேடையில ஆடியதை எடுக்காத்தால கீழ ஆடியதிலிருந்து ஒரு காட்சி


திரையிடல் சங்க செயலாளராக தீபிடிக்கிற மாதிரி ஒன்னும் பட போடாவிட்டாலும், 'தீ' நடனம் ஆடிய பட்ஜாயிண்ட் பத்மனாபன்!

தமிழ்த் தென்றல் நாயகர் 'முத்துமாணிக்கம்' அவர்கள்.

தமிழ்த் தென்றல் வீடியோ பதிவு விரைவில் வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இந்த புகைப்படப் பதிவு!!

Thursday, March 08, 2007

மொழி - ராதா மோகனுக்குப் பாராட்டு!

இன்று (08.03.07) நம் கல்லூரியில் மொழி படம் திரையிடப்பட்டது. இயக்குநர் ராதா மோகன் வந்திருந்து மாணவர் கருத்துகளைக் கேட்டார். "மாணவர்கள் முழுமையாக படத்தை ரசிக்கவும், மக்களோடு அமர்ந்து அவர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்களே அனுமதிச்சீட்டு வாங்கித் தருகிறோம். பார்க்கச் சொல்லுங்கள்." என்று முதல் முறையாக வித்தியாசமான அணுகுமுறைக்கு அழைத்தனர் படக்குழுவினரும் பிரகாஷ் ராஜ் அவர்களும். ஆனாலும் கல்லூரி விதிகள் காரணமாக கல்லூரிக்குள்ளேயே திரையிடப்பட்டது.

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராதாமோகனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாய், "மாணவர்கள் அனைவரும் எழுந்து மொழியின் மொழியில் கைதட்டுங்கள்" என்று பிரின்சு வேண்டுகோள் விடுத்ததும், காதுகேளாதோர்-வாய்பேசாதோரின் சைகை (ஜாடை) மொழியில், இரு கைகளையும் உயர்த்தி ஆட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இது கண்டு மிகவும் பூரிப்படைந்த இயக்குநர் ராதாமோகன், அதே சைகை மொழியில் நன்றியும் தெரிவித்து நிகழ்ச்சியை கவிதையாய் முடித்துவைத்தார்.



(நிகழ்ச்சியின் புகைப்படம் அடித்த பதிவில்)

Sunday, March 04, 2007

ஆசிரியர் மானவர் கிரிக்கெட்

இடப்பக்கமிருந்து சீனு சார்! வலப்பக்கமிருந்து ரங்ஸ் அண்ணா!

முதலில் களமிறங்கி ஆசிரியர் அணி ஆட, அதன் பிறகு மாணவர்கள்....
ஆடுவத்குள் இருட்டத்தொடங்கிவிட, மாணவர்கள் அணி 6 ஓவர் ஆடியதோடு ஆட்டம் சமநிலை அடைந்ததாக நிறைவு செய்யப்பட்டது.

Monday, February 19, 2007

கிரிக்கெட் (மிச்ச சொச்சம்)

இன்று நம் கல்லூரியின் விளையாட்டு விழா நடக்க இருக்கிறது. சரி, மிச்சம் இருக்கிற கிரிக்கெட் போட்டி படங்களை பார்த்துடுங்க....





பேட்ஸ்மேன் ரமேஷ்!! (சார்! எந்தக் கெமிக்கல் கலந்தால் நிறைய நேரம் நின்னுஆட முடியும்)








நம்ம போட்டாகிராபர் ஆர்டர் ராஜபாண்டி ஆர்வமா எடுத்த ஆராய்ச்சி படங்கள்.







இவருதான் அந்த ஆராய்ச்சி போட்டோகிராபர் (மேற்படி புகைப்படத்தை அவர் எடுத்தபோது அவரை நாம் எடுத்த புகைப்படம் கீழே இருப்பது)




மன்னிக்கனும், டாஸ்போட்ட படம் முன்னாடியே போடனுமில்ல...
அடுத்த பதிவில்...

சீனு சார் பவுலிங் .... கற்பனையல்ல நிஜம்

நம்ம ரங்ஸ் அண்ணா பந்து போட்டால்!

மற்றும் இன்றைய போடிகளின் படங்கள்!

ஆசிரியர்கள் vs மாணவர்கள் கிரிக்கெட் - 1

மாணவர்கள் பயிற்சி எடுக்கிறாங்க....




யாரது டெண்டுல்கரா? ஆமாங்க... திரைப்படக்கல்லூரியின் டெண்டுல்கர்... நம்ம ரங்ஸ் அண்ணா தான்.





இது கமெண்ட்ரி மேடை! ஒரே கலாய்த்தல் வாடை!!


மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும் அடுத்த பதிவுல.....

Sunday, February 18, 2007

எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி விளையாட்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 16.02.2007 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தியாகராயர் நகர், ராமகிருஷ்ணா பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
முதலில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. 15 ஓவர்களுக்கு, முதலாமாண்டு அணி 116 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இரண்டாமாண்டு அணி மிக எளிதில் போட்டியை வென்றது.


முதலாமாண்டுக்கும் இரண்டாமாண்டுக்குமிடயிலான போட்டியில் சில காட்சிகள்:

1. வியர்வையைத் துடைக்கும் ஸ்ரீதர், இரண்டாமண்டு, இரண்டாம் ஆண்டு அணித்தலைவர் கோபி (blue T-shirt)




2.இரண்டாமாண்டுக்கும் மூன்றாமாண்டுக்குமான போட்டி:

(வலமிருந்து): பேட் பிடித்தபடி கோபி(2-ஆம் ஆண்டு), ஓம்பிரகாஷ் (3-ஆம் ஆண்டு), பாஸ்கர் (2-ஆம் ஆண்டு), தினேஷ் (3-ஆம் ஆண்டு),



அடுத்து இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் மூன்றாமாண்டு மாணவர்களுக்குமான போட்டி நடைபெற்றது. நாட்டாமைக்கு அடுத்தபடி நல்ல தீர்ப்பு தரும் நம்ம ரங்ஸ் அண்ணாவும், உமர் சாரும் நடுவர் பொறுப்பேற்க போட்டி ஆரம்பமானது.




முதலில் களமிறங்கியது மூன்றாமாண்டு அணி. தினேஷும், நவீனும் புகுந்து, கொஞம் ரன் எடுத்தபடி தினேஷ் வெளியேற, னவீன் ஒரு மூன்று ஓவர் ஓவரா கட்டையை போட்டதால, அன்போட வெளியே வந்தார். ஒரு வழியா, 15 ஓவரில 127 ஓட்டங்கள் எடுத்தது மூன்றாமாண்டு அணி. அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற மணிமாறன் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து 48 ஓட்டங்கள் எடுத்து சிறப்பா ஆடினார்.




இதற்கு இடையில், மதிய உணவு இடைவேளை வந்தது. நம் பேராசிரியர்கள் எல்லாம் ரொம்ப அன்போட பரிமாற மாணவர்கள் செமத்தியா ஒரு ஆட்டம் ஆடினாங்க!

3. ராம்கி சார் பரிமாற, தினேஷ் வரிசையில முன்னாடி வந்த சந்தோசத்தில கூளிங் கிளாஸ் உடன் சிரிக்கிறான். பின்னாடி நின்று பச்சை டிசர்ட்டில மேஸ்திரி மாதிரி பார்க்கிறது.... அட, staff இல்லைங்க மூன்றாமாண்டு மாணவர் 'கஜினி' முருகன் தான்.


4. சீனு சாரும், பின்னாடி ஜீவா அண்ணனும் பரிமாறுகிறார்கள்.


ஸ்கோர் போர்டு பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடுறது நவீன், நின்னு சிரிக்கிற சிகப்பு டிசர்ட் நம்ம அருண் (3-ஆம் ஆண்டு)


5. இருக்கிறேன்னு ஆஜர் குடுக்கிறது 'கருப்புத் தங்கம்' லூகாஸ், வாயில் கைவைத்தபடி எழில், அதுக்குக் கீழ டேவிட், 'போஸ்' மோகன், அப்புறம் ஓம் பிரகாஷ், காதில போன் வச்சபடி தினேஷ், கீழ் கடைசியில பழனி


சாப்பாட்டுக்குப் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், இரண்டாமாண்டு அணி சிறப்பாக விளையாட அதனுடைய அணித் தலைவர் கோபி முக்கிய காரணமானார். அவர் 50 ரன்னுக்கும் மேல் எடுத்து தன்னுடைய அணி எண்ணிக்கையை உயர்த்தினார். சரி, இரண்டாமாண்டு ஜெயிச்சிடும்-னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருந்தா, கடைசி ஓவரில கூட கடினமா போராடுது மூன்றாமாண்டு அணி(மானப் போராட்டம்).
கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், இன்னும் 3 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் வெற்றிபெற்றது இரண்டாமாண்டு அணி. ரொம்ப பெருந்தன்மையா தங்களுடைய இளையர்களின் வெற்றியை ஏற்றுக்கொண்டு வாழ்த்தினார்கள் மூத்தவர்கள்.
சரி, இதோட அன்றைய கூத்து முடியலை. பிறகு தொடங்கியது
Rest of 3rd Year vs Staff.
அதைப் பற்றி அடுத்த பதிவுல பார்ப்போம்.